حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ حَدَّثَنَا هُشَيْمُ بْنُ بَشِيرٍ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ أَبِي عُثْمَانَ قَالَ لَمَّا ادُّعِيَ زِيَادٌ لَقِيتُ أَبَا بَكْرَةَ فَقُلْتُ لَهُ مَا هَذَا الَّذِي صَنَعْتُمْ إِنِّي سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُا
سَمِعَ أُذُنَايَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ مَنْ ادَّعَى أَبًا فِي الْإِسْلَامِ غَيْرَ أَبِيهِ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
فَقَالَ أَبُو بَكْرَةَ وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(உபைத் அஸ்ஸகஃபீ என்பாரின் மகன்) ஸியாத் என்பவரை (அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் புதல்வர் என்று குறிப்பிட்டு) அழைக்கப் பட்ட காலகட்டதில், (உஸ்மான் அந்நஹ்தீ ஆகிய) நான் அபூபக்ரா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம், “நீங்களெல்லாம் செய்வதென்ன? ‘இஸ்லாத்தில் தம் தகப்பனல்லாத வேறொருவரை – அவர்தம் தகப்பனல்லர் என்று தெரிந்து கொண்டே – தம் தகப்பன் என்று கூறுகின்றவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற என்னிரு காதுகளால் செவியுற்றேன் என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே!” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள், “நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அதைச் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)