و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنِي مُعَاذُ بْنُ مُعَاذٍ ح و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ
يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي الْأَنْصَارِ لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ
قَالَ شُعْبَةُ قُلْتُ لِعَدِيٍّ سَمِعْتَهُ مِنْ الْبَرَاءِ قَالَ إِيَّايَ حَدَّثَ
அன்ஸாரிகள் தொடர்பாக நபி (ஸல்)அவர்கள் கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்க மாட்டார்கள். அவர்களை நேசிப்பவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவர்களை வெறுப்பவரை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அல்-பராஉ பின் ஆஸிப் (ரலி).
குறிப்பு :
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம். “இதை அல்-பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ” (ஆம்!) எனக்கே அவர்கள் அறிவித்தார்கள்” என்று பதிலளித்தார்.