அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 142

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏خَالِدًا الْأَثْبَجَ ‏ ‏ابْنَ أَخِي ‏ ‏صَفْوَانَ بْنِ مُحْرِزٍ ‏ ‏حَدَّثَ عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ مُحْرِزٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَ ‏
‏أَنَّ ‏ ‏جُنْدَبَ بْنَ عَبْدِ اللَّهِ الْبَجَلِيَّ ‏ ‏بَعَثَ إِلَى ‏ ‏عَسْعَسِ بْنِ سَلَامَةَ ‏ ‏زَمَنَ فِتْنَةِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ اجْمَعْ لِي نَفَرًا مِنْ إِخْوَانِكَ حَتَّى أُحَدِّثَهُمْ فَبَعَثَ رَسُولًا إِلَيْهِمْ فَلَمَّا اجْتَمَعُوا جَاءَ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏وَعَلَيْهِ بُرْنُسٌ أَصْفَرُ فَقَالَ تَحَدَّثُوا بِمَا كُنْتُمْ تَحَدَّثُونَ بِهِ حَتَّى دَارَ الْحَدِيثُ فَلَمَّا دَارَ الْحَدِيثُ إِلَيْهِ حَسَرَ الْبُرْنُسَ عَنْ رَأْسِهِ فَقَالَ إِنِّي أَتَيْتُكُمْ وَلَا أُرِيدُ أَنْ أُخْبِرَكُمْ عَنْ نَبِيِّكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ بَعْثًا مِنْ الْمُسْلِمِينَ إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ وَإِنَّهُمْ الْتَقَوْا فَكَانَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ إِذَا شَاءَ أَنْ يَقْصِدَ إِلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ لَهُ فَقَتَلَهُ وَإِنَّ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ غَفْلَتَهُ قَالَ وَكُنَّا نُحَدَّثُ أَنَّهُ ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَلَمَّا رَفَعَ عَلَيْهِ السَّيْفَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَتَلَهُ فَجَاءَ ‏ ‏الْبَشِيرُ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ فَأَخْبَرَهُ حَتَّى أَخْبَرَهُ خَبَرَ الرَّجُلِ كَيْفَ صَنَعَ فَدَعَاهُ فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏لِمَ قَتَلْتَهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَوْجَعَ فِي الْمُسْلِمِينَ وَقَتَلَ فُلَانًا وَفُلَانًا وَسَمَّى لَهُ نَفَرًا وَإِنِّي حَمَلْتُ عَلَيْهِ فَلَمَّا رَأَى السَّيْفَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَقَتَلْتَهُ قَالَ نَعَمْ قَالَ فَكَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي قَالَ وَكَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَجَعَلَ لَا يَزِيدُهُ عَلَى أَنْ يَقُولَ كَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அஸ்அஸ் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “உங்களுடைய சகோதரர்களைச் சார்ந்தோரை எனக்காக ஒன்று திரட்டுங்கள்; அவர்களிடம் நான் பேசவேண்டும்” என்று சொல்லி அனுப்பினார்கள். இது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த ஒரு சண்டையின் போது நடந்தது. அஸ்அஸ் ஒரு தூதுவரை (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அவ்வாறே அவர்கள் ஒன்று கூடியதும் ஒரு மஞ்சள் நிறத் தலைத்துணியை (முக்காடிட்டு) அணிந்தவர்களாக ஜுன்தப் (ரலி) (அவர்களிடம்) வந்து, “நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை(த் தொடர்ந்து)ப் பேசுங்கள்” என்று சொன்னார்கள். அதையடுத்து கூடியிருந்தோரின் பேச்சு ஒரு சுற்று வந்தது. ஜுன்தப் (ரலி) பேச வேண்டிய முறை வந்தபோது, அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டு, “நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபிச்செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வரவில்லை. (ஆனால், இப்போது கேளுங்கள்:)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப்பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர் முஸ்லிம்களில் பலரை நினைத்த மாத்திரத்தில் தாக்கிக் கொன்று போட்டுக் கொண்டிருந்தார். அந்த இக்கட்டான சூழலில், முஸ்லிம் வீரர்களில் ஒருவர் – அவர் உஸாமா பின் ஸைத் என்று நாங்கள் சொல்வோம் – அந்த எதிரி அயரும் வேளை காத்திருந்து, அவர் மீது வாளை உயர்த்தியபோது அவர், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (ஏகத்துவ உறுதிமொழியைக்) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உஸாமா (ரலி) அவர்கள் அவரைக் கொன்று விட்டார். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தவரிடம் நபி(ஸல்) அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்து கொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி(ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை வரவழைத்து “நீ ஏன் அவரைக் கொன்றாய்?” என்று கேட்டார்கள். உஸாமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அம்மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார். (சில முஸ்லிம் வீரர்களது பெயரைக் குறிப்பிட்டு) இன்னார் இன்னாரை அவர் கொன்று விட்டார். ஆகவே அவரை நான் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்து போய்) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (ஏகத்துவ உறுதிமொழியைக்) கூறினார்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை நீ கொன்றுவிட்டாயா?” என்று கேட்டார்கள். உஸாமா(ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) லா இலாஹ இல்லல்லாஹ் மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று திரும்பத் திரும்பக் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி).

Share this Hadith:

Leave a Comment