حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ ادَّعَى دَعْوَى كَاذِبَةً لِيَتَكَثَّرَ بِهَا لَمْ يَزِدْهُ اللَّهُ إِلَّا قِلَّةً وَمَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ فَاجِرَةٍ
தம் கைவசம் இல்லாததில் நேர்ச்சை செய்வது (ம் அதை நிறைவேற்றுவதும்) எவருக்கும் தகாது. ஓர் இறை நம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். இவ்வுலகில் எதைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். (நீதிபதி முன் அளிக்கும்) பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திக்குபோது அவனது கோபத்துக்கு உள்ளானவராகவே சந்திப்பார்.
அறிவிப்பாளர்: ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)