அத்தியாயம்: 1, பாடம்: 49, ஹதீஸ் எண்: 167

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَجَّاجٍ الصَّوَّافِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏
‏أَنَّ ‏ ‏الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ ‏ ‏أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ ‏ ‏لِدَوْسٍ ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلَّذِي ‏ ‏ذَخَرَ ‏ ‏اللَّهُ ‏ ‏لِلْأَنْصَارِ ‏ ‏فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏هَاجَرَ إِلَيْهِ ‏ ‏الطُّفَيْلُ بْنُ عَمْرٍو ‏ ‏وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ ‏ ‏فَاجْتَوَوْا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ ‏ ‏مَشَاقِصَ ‏ ‏لَهُ فَقَطَعَ بِهَا ‏ ‏بَرَاجِمَهُ ‏ ‏فَشَخَبَتْ ‏ ‏يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ ‏ ‏الطُّفَيْلُ بْنُ عَمْرٍو ‏ ‏فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا ‏ ‏الطُّفَيْلُ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ

அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குச் சொந்தமான கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது உங்களைத்) தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை இருக்கிறதா? (தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ள கோட்டை தங்களுக்கு வேண்டுமா?)” என்று வினவினார். (அது மதீனத்து) அன்ஸாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களோடு துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவை அண்மியபோது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் அவர் நோய்வாய்ப்பட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) துடித்துப்போன அவர், தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கைகளின் நாடிநரம்பை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் முழுக்க வடிந்து, இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில்தான் காட்சியளித்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மறைக்கப் பட்டிருந்தன. அவரிடம், “உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நாடு துறந்து அவனுடைய நபியிடம் வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்” என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள். “ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டார்கள். “நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது.” என்று அவர் சொன்னார்.

துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!” என்று பிராத்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி).

Share this Hadith:

Leave a Comment