அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 190

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مَحْمُودُ بْنُ غَيْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ السَّمَاءَ مَنْ خَلَقَ الْأَرْضَ فَيَقُولُ اللَّهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ وَزَادَ وَرُسُلِهِ ‏

“எல்லாப் படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று நீட்சியடையும் கேள்வி கேட்கும் குழப்ப நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். (உங்களுள்) ஒருவருக்கு இதுபோன்ற குழப்ப எண்ணம் ஏற்பட்டால் ‘நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி (அதில் அவர் உறுதி அடைந்து) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

ஹிஷாம் பின் உர்வா (ரலி) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து ‘வானத்தைப் படைத்தவன் யார்? பூமியைப் படைத்தவர் யார்?’ என்று கேட்பான். அவர் ‘அல்லாஹ்’ என்று பதிலளிப்பார். (தொடர்ந்து, அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்றும் கேட்பான்) என்றும் ‘அத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறுங்கள்” என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment