அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 200

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏وَائِلِ بْنِ حُجْرٍ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ عِنْدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلَانِ يَخْتَصِمَانِ فِي أَرْضٍ فَقَالَ أَحَدُهُمَا إِنَّ هَذَا ‏ ‏انْتَزَى ‏ ‏عَلَى أَرْضِي يَا رَسُولَ اللَّهِ فِي الْجَاهِلِيَّةِ وَهُوَ ‏ ‏امْرُؤُ الْقَيْسِ بْنُ عَابِسٍ الْكِنْدِيُّ ‏ ‏وَخَصْمُهُ ‏ ‏رَبِيعَةُ بْنُ عِبْدَانَ ‏ ‏قَالَ ‏ ‏بَيِّنَتُكَ ‏ ‏قَالَ لَيْسَ لِي بَيِّنَةٌ قَالَ يَمِينُهُ قَالَ إِذَنْ يَذْهَبُ بِهَا قَالَ لَيْسَ لَكَ إِلَّا ذَاكَ قَالَ فَلَمَّا قَامَ لِيَحْلِفَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ‏ ‏اقْتَطَعَ ‏ ‏أَرْضًا ظَالِمًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏
‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏رَبِيعَةُ بْنُ عَيْدَانَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நான் இருந்தபோது, ஒரு நிலம் தொடர்பான வழக்கை இருவர் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் இவர், எனது நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டார்” என்று கூறினார். (அந்த வழக்குவாதியான) அவர், இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் அல்கிந்தீ என்பவராவார். அவருடைய பிரதிவாதி, ரபீஆ பின் இப்தான் என்பவராவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது ஆதாரம் என்ன?” என்று (வாதியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், “என்னிடம் ஆதாரம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். “எனில், (பிரதிவாதியான) இவரது சத்தியம்தான் (தீர்வு)” என்று சொன்னார்கள். “அவர் (பொய்ச் சத்தியம் செய்து) அந்த நிலத்தைத் தட்டிக் கொண்டு போய் விடுவார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக பிரதிவாதி எழுந்தபோது, “அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக் கொள்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி).

குறிப்பு:

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், பிரதிவாதியின் பெயரான ரபீஆ பின் இப்தான் என்பதற்கு பதிலாக ரபீஆ பின் அய்தான் என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment