حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِيهِ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أَطُوفُ بِالْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ سَبِطُ الشَّعْرِ بَيْنَ رَجُلَيْنِ يَنْطِفُ رَأْسُهُ مَاءً أَوْ يُهَرَاقُ رَأْسُهُ مَاءً قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ابْنُ مَرْيَمَ ثُمَّ ذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ جَعْدُ الرَّأْسِ أَعْوَرُ الْعَيْنِ كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ قُلْتُ مَنْ هَذَا قَالُوا الدَّجَّالُ أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ
“நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். அங்கு இருவருக்கிடையில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது – அல்லது – அவருடைய தலையிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மைந்தர் என்று பதிலளித்தார்கள்.
(அவரைக் கடந்து) நான் சென்றபோது சிவப்பான, உடல்பருத்த, பரட்டைமுடி கொண்ட, (ஒரு) கண் குருடான ஒருவன் அங்கிருந்தான். அவனது கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள். மனிதர்களுள் அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் என்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).