و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا عَبَّادٌ وَهُوَ ابْنُ الْعَوَّامِ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ قَالَ سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى – قَالَ أَخْبَرَنِي ابْنُ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ
“(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான அல்லது அதைவிடக் குறைந்த (இடைவெளியில் அவரது) நெருக்கம் இருந்தது” எனும் (53:9 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என்பதே கருத்தாகும்”
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
குறிப்பு:
சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) 53:9 ஆவது வசனத்திற்கு, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம் விளக்கம் கோரியபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது மேற்காணும் விளக்கத்தைத் தெரிவித்தார்.