حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ سَمِعَ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ
قَالَ لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى
– قَالَ رَأَى جِبْرِيلَ فِي صُورَتِهِ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ
“உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரிய சான்றைக் கண்டார்” எனும் (53:18 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்” என்பது பொருளாகும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்).