و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُدْخِلُ اللَّهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ يُدْخِلُ مَنْ يَشَاءُ بِرَحْمَتِهِ وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ انْظُرُوا مَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ فَيُخْرَجُونَ مِنْهَا حُمَمًا قَدْ امْتَحَشُوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَاةِ أَوْ الْحَيَا فَيَنْبُتُونَ فِيهِ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ إِلَى جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَوْهَا كَيْفَ تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً
و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا وُهَيْبٌ ح و حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا خَالِدٌ كِلَاهُمَا عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بِهَذَا الْإِسْنَادِ وَقَالَا فَيُلْقَوْنَ فِي نَهَرٍ يُقَالَ لَهُ الْحَيَاةُ وَلَمْ يَشُكَّا وَفِي حَدِيثِ خَالِدٍ كَمَا تَنْبُتُ الْغُثَاءَةُ فِي جَانِبِ السَّيْلِ وَفِي حَدِيثِ وُهَيْبٍ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِئَةٍ أَوْ حَمِيلَةِ السَّيْلِ
“சொர்க்கவாசிகளை (மறுமையில்) அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப்பெரும்) கருணையால் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான். பிறகு, ‘உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளவராகப் பார்த்து (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகி விட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப்படுவார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ (ஜீவ) நதியில் அல்லது ‘நஹ்ருல் ஹயா’ (மழைநீர்) நதியில் போடப்பட்டு, உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) நிறம் மாறி வெளியாவார்கள். முளைத்து வரும் வித்து, மஞ்சள் நிறத்தில் அசைந்தாடும் காட்சியை நீங்கள் கண்டிருக்கின்றீர்கள் அல்லவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).
குறிப்பு:
இதே ஹதீஸ், அம்ரிப்னுக் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்” என்று ஐயமின்றி இடம்பெற்றுள்ளது. காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நதிக்கரையோரத்தில் உள்ள குப்பைகளிலிருந்து முளைப்பதைப்போல்” என்று குறிப்பிடப் படுகிறது. உஹைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “களிமண்ணிலிருந்து அல்லது சேற்று வெள்ளத்திலிருந்து மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப் போன்று” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது