அத்தியாயம்: 1, பாடம்: 82, ஹதீஸ் எண்: 271

و حَدَّثَنِي ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا أَهْلُ النَّارِ الَّذِينَ هُمْ أَهْلُهَا فَإِنَّهُمْ لَا يَمُوتُونَ فِيهَا وَلَا يَحْيَوْنَ وَلَكِنْ نَاسٌ أَصَابَتْهُمْ النَّارُ بِذُنُوبِهِمْ ‏ ‏أَوْ قَالَ بِخَطَايَاهُمْ ‏ ‏فَأَمَاتَهُمْ إِمَاتَةً حَتَّى إِذَا كَانُوا فَحْمًا أُذِنَ بِالشَّفَاعَةِ فَجِيءَ بِهِمْ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏فَبُثُّوا ‏ ‏عَلَى أَنْهَارِ الْجَنَّةِ ثُمَّ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ أَفِيضُوا عَلَيْهِمْ فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ تَكُونُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ كَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ كَانَ ‏ ‏بِالْبَادِيَةِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏

“நரகத்திற்குரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் (முற்றாக) இறக்கவுமாட்டார்கள்; வாழவுமாட்டார்கள். ஆனால், தம் பாவங்களால் அல்லது குற்றங்களால் நரக நெருப்பிற்கு ஆளானவர்களை (இறைவன் தற்காலிகமாக) இறக்கச் செய்து விடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும்போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளுக்கு) அனுமதி வழங்கப்படும். அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகைகளில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு “சொர்க்கவாசிகளே! அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும் (அவ்வாறே ஊற்றப்பட்டு) வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியபோது மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், முஹம்மதிப்னுல் முஸன்னா (ரஹ்), இபுனு பஷ்ஷார் (ரஹ்) ஆகிய இருவரது வழி அறிப்பில், “வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment