அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 282

و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ يَعْنِي مُحَمَّدَ بْنَ أَبِي أَيُّوبَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ الْفَقِيرُ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ قَدْ ‏ ‏شَغَفَنِي ‏ ‏رَأْيٌ مِنْ رَأْيِ ‏ ‏الْخَوَارِجِ ‏ ‏فَخَرَجْنَا فِي عِصَابَةٍ ذَوِي عَدَدٍ نُرِيدُ أَنْ نَحُجَّ ثُمَّ نَخْرُجَ عَلَى النَّاسِ قَالَ فَمَرَرْنَا عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَإِذَا ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ الْقَوْمَ جَالِسٌ إِلَى سَارِيَةٍ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَإِذَا هُوَ قَدْ ذَكَرَ ‏ ‏الْجَهَنَّمِيِّينَ قَالَ فَقُلْتُ لَهُ يَا صَاحِبَ رَسُولِ اللَّهِ مَا هَذَا الَّذِي تُحَدِّثُونَ وَاللَّهُ يَقُولُ ‏: ‏إِنَّكَ مَنْ تُدْخِلْ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ‏

‏وَ ‏‏كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا ‏

‏فَمَا هَذَا الَّذِي تَقُولُونَ قَالَ فَقَالَ أَتَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ نَعَمْ قَالَ فَهَلْ سَمِعْتَ بِمَقَامِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏يَعْنِي الَّذِي يَبْعَثُهُ اللَّهُ فِيهِ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏فَإِنَّهُ مَقَامُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَحْمُودُ الَّذِي يُخْرِجُ اللَّهُ بِهِ مَنْ يُخْرِجُ قَالَ ثُمَّ ‏ ‏نَعَتَ ‏ ‏وَضْعَ الصِّرَاطِ وَمَرَّ النَّاسِ عَلَيْهِ قَالَ وَأَخَافُ أَنْ لَا أَكُونَ أَحْفَظُ ذَاكَ قَالَ غَيْرَ أَنَّهُ قَدْ زَعَمَ أَنَّ قَوْمًا يَخْرُجُونَ مِنْ النَّارِ بَعْدَ أَنْ يَكُونُوا فِيهَا قَالَ ‏ ‏يَعْنِي فَيَخْرُجُونَ كَأَنَّهُمْ عِيدَانُ السَّمَاسِمِ قَالَ فَيَدْخُلُونَ نَهَرًا مِنْ أَنْهَارِ الْجَنَّةِ فَيَغْتَسِلُونَ فِيهِ فَيَخْرُجُونَ كَأَنَّهُمْ الْقَرَاطِيسُ ‏
‏فَرَجَعْنَا قُلْنَا وَيْحَكُمْ أَتُرَوْنَ الشَّيْخَ يَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَجَعْنَا فَلَا وَاللَّهِ مَا خَرَجَ مِنَّا غَيْرُ رَجُلٍ وَاحِدٍ أَوْ كَمَا قَالَ ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏

(மறுமையில் பரிந்துரை, நரக விடுதலை என்பதெல்லாம் இல்லை எனும்) கார்ஜிய்யாக்களின் கருத்துருவாக்கம் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் (கணிசமான) எண்ணிக்கை கொண்ட ஒரு குழுவாக நாங்கள் ஹஜ் செய்து விட்டுப் பிறகு (காரிஜிய்யாக்களின் கருத்தைப் பற்றி விசாரிக்க) மக்களிடம் புறப்பட்டுச் செல்லத் தீர்மானித்தோம். அப்பயணத்தில் நாங்கள் மதீனாவை அடைந்தோம். அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அமர்ந்து கொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ‘நரக விடுதலை பெறுவோர்’ பற்றியும் குறிப்பிட்டார்கள்.

நான், “இறைத்தூதரின் தோழரே! ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய் …’ (3:192) என்றும் ‘அவர்கள் அ(அந்த நரகத்)தை விட்டு வெளியேற முயலும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவர் …” (32:20) என்றும் அல்லாஹ் கூறுகின்றான். ஆனால், நீங்களோ வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அவ்வாறாயின், மகாமு மஹ்மூத் எனும் உயர்ந்த இடத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எழுப்புவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள், “அந்த மகாமு மஹ்மூத் எனும் உயர்ந்த இடத்தில் நபி (ஸல்) இருக்கும் நிலையில்தான் அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேறுவான்” என்று கூறிவிட்டு, பிறகு ‘ஸிராத்’ எனும் பாலம் அமைக்கப்படுவது பற்றியும் அதைக் கடந்து மக்கள் செல்வது பற்றியும் விவரித்தார்கள். மேலும், “இதை நான் மனனமிட்டுக் கொள்ளாதவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும், “எள்ளுச் செடியின் குச்சிகளைப் போன்று சிலர் நரகத்திலிருந்து (கரிய நிறத்தில் கருகி) வெளியேறுவார்கள். பிறகு சொர்க்க நதிகளில் ஒன்றில் நீராடி, வெள்ளைத் தாள்களைப் போன்று (புதுப்பொலிவுடன்) வெளியேறுவார்கள்” என்று கூறினார்கள்.

நாங்கள், “(காரிஜிய்யாக்களே!) உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது இந்த அறிஞர் பொய்யுரைக்கிறார் என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று சொல்லிக் கொண்டே (அங்கிருந்து) திரும்பினோம். அல்லாஹ்வின் மீதாணையாக! (பரிந்துரையும் நரக விடுதலையும் உண்டு எனும் எங்கள் கொள்கையிலிருந்து) எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர வேறெவரும் விலகி விடாத நிலையில் நாங்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பினோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அறிவித்ததாக யஸீத் அல்-ஃபகீர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment