அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 286

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْبَدُ بْنُ هِلَالٍ الْعَنَزِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْبَدُ بْنُ هِلَالٍ الْعَنَزِيُّ ‏ ‏قَالَ ‏ ‏انْطَلَقْنَا إِلَى ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏وَتَشَفَّعْنَا ‏ ‏بِثَابِتٍ ‏ ‏فَانْتَهَيْنَا إِلَيْهِ وَهُوَ ‏ ‏يُصَلِّي الضُّحَى فَاسْتَأْذَنَ لَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏فَدَخَلْنَا عَلَيْهِ وَأَجْلَسَ ‏ ‏ثَابِتًا ‏ ‏مَعَهُ عَلَى سَرِيرِهِ فَقَالَ لَهُ يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏إِنَّ إِخْوَانَكَ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏يَسْأَلُونَكَ أَنْ تُحَدِّثَهُمْ حَدِيثَ الشَّفَاعَةِ قَالَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ ‏ ‏مَاجَ ‏ ‏النَّاسُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏فَيَقُولُونَ لَهُ اشْفَعْ لِذُرِّيَّتِكَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ ‏ ‏خَلِيلُ ‏ ‏اللَّهِ فَيَأْتُونَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِمُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ كَلِيمُ اللَّهِ فَيُؤْتَى ‏ ‏مُوسَى ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِعِيسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ ‏ ‏فَيُؤتَى ‏ ‏عِيسَى ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِمُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأُوتَى فَأَقُولُ أَنَا لَهَا فَأَنْطَلِقُ فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي فَأَقُومُ بَيْنَ يَدَيْهِ فَأَحْمَدُهُ بِمَحَامِدَ لَا أَقْدِرُ عَلَيْهِ الْآنَ يُلْهِمُنِيهِ اللَّهُ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ بُرَّةٍ أَوْ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْهَا فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَرْجِعُ إِلَى رَبِّي فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ لِي انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ ‏ ‏خَرْدَلٍ ‏ ‏مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْهَا فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ إِلَى رَبِّي فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ لِي انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَى أَدْنَى أَدْنَى مِنْ مِثْقَالِ حَبَّةٍ مِنْ ‏ ‏خَرْدَلٍ ‏ ‏مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْ النَّارِ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ‏
‏هَذَا حَدِيثُ ‏ ‏أَنَسٍ ‏ ‏الَّذِي أَنْبَأَنَا بِهِ فَخَرَجْنَا مِنْ عِنْدِهِ فَلَمَّا كُنَّا ‏ ‏بِظَهْرِ الْجَبَّانِ ‏ ‏قُلْنَا لَوْ مِلْنَا إِلَى ‏ ‏الْحَسَنِ ‏ ‏فَسَلَّمْنَا عَلَيْهِ وَهُوَ مُسْتَخْفٍ فِي دَارِ ‏ ‏أَبِي خَلِيفَةَ ‏ ‏قَالَ فَدَخَلْنَا عَلَيْهِ فَسَلَّمْنَا عَلَيْهِ فَقُلْنَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏جِئْنَا مِنْ عِنْدِ أَخِيكَ ‏ ‏أَبِي حَمْزَةَ ‏ ‏فَلَمْ نَسْمَعْ مِثْلَ حَدِيثٍ حَدَّثَنَاهُ فِي الشَّفَاعَةِ قَالَ ‏ ‏هِيَهِ فَحَدَّثْنَاهُ الْحَدِيثَ فَقَالَ ‏ ‏هِيَهِ قُلْنَا مَا زَادَنَا قَالَ ‏ ‏قَدْ حَدَّثَنَا بِهِ مُنْذُ عِشْرِينَ سَنَةً وَهُوَ يَوْمَئِذٍ جَمِيعٌ وَلَقَدْ تَرَكَ شَيْئًا مَا أَدْرِي أَنَسِيَ الشَّيْخُ أَوْ كَرِهَ أَنْ يُحَدِّثَكُمْ فَتَتَّكِلُوا قُلْنَا لَهُ حَدِّثْنَا فَضَحِكَ وَقَالَ ‏
‏خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ ‏

‏مَا ذَكَرْتُ لَكُمْ هَذَا إِلَّا وَأَنَا أُرِيدُ أَنْ أُحَدِّثَكُمُوهُ ثُمَّ أَرْجِعُ إِلَى رَبِّي فِي الرَّابِعَةِ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ ائْذَنْ لِي فِيمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ لَيْسَ ذَاكَ لَكَ أَوْ قَالَ لَيْسَ ذَاكَ إِلَيْكَ وَلَكِنْ وَعِزَّتِي وَكِبْرِيَائِي وَعَظَمَتِي ‏ ‏وَجِبْرِيَائِي ‏ ‏لَأُخْرِجَنَّ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ فَأَشْهَدُ عَلَى ‏ ‏الْحَسَنِ ‏ ‏أَنَّهُ حَدَّثَنَا بِهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏أُرَاهُ قَالَ قَبْلَ عِشْرِينَ سَنَةً وَهُوَ يَوْمِئِذٍ جَمِيعٌ ‏

“(நிலை தடுமாற வைக்கும்) மறுமை நாள் நிகழும்போது மக்கள் (பரிந்துரைக்காக) அலைமோதுவார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘உங்களின் வழித்தோன்றல்க(களான எங்க)ளுக்காக நீங்கள் (அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்’ என்று கோருவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களும் ‘எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்விடம் உரையாடியவர் ஆவார்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை) மூஸா (அலை) அவர்கள் முன் வைக்கப் படும். மூஸா (அலை) அவர்களும் ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய சொல்லுமாவார்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை) ஈஸா (அலை) அவர்கள் முன் வைக்கப் படும். ஈஸா (அலை) அவர்களும் ‘எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை இறுதியாக) என்னிடம் கொண்டு வரப்படும். அப்போது, ‘நான் அதற்குரியவனே’ என்று சொல்லிவிட்டு (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் சென்று அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். உடனே நான் இறைவனுக்கு முன்னால் நின்று, தற்போது என் சொல்லிலடங்காத, அப்போது அல்லாஹ் என் எண்ணத்தில் ஏற்படுத்தும் புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்து விடுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று அறிவிப்புச் செய்யப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்பேன்.

அப்போது, ‘செல்லுங்கள், எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அல்லது வாற்கோதுமையளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே வெளியேற்றுவேன். பிறகு மீண்டும் என் இறைவனிடம் வந்து, அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்து விடுவேன். அப்போதும், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். அப்போதும் ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்றே நான் கோரும்போது, ‘செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரக)நெருப்பிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று என்னிடம் கூறப்படும்.

நான் சென்று அவ்வாறே வெளியேற்றிவிட்டு, மீண்டும் என் இறைவனிடம் திரும்பி வருவேன். அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பின்னர் அவனுக்காகச் சிரம் பணிந்து விழுவேன். அப்போதும் என்னிடம், ‘முஹம்மதே! எழுந்திருங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரையுங்கள்; ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அதற்கு நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்றே நான் கோரும்போது, ‘செல்லுங்கள், எவரது உள்ளத்தில் கடுகுமணியைவிட மிக மிக மிகச் சிறிய அளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று என்னிடம் கூறப்படும். நானும் சென்று அவ்வாறே செய்வேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).

குறிப்பு:

மஅபதிப்னு ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவாசியான) நாங்கள் அபூஹம்ஸா (என்றழைக்கப்பட்ட) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பயணப் பட்டோம். (பரிந்துரை குறித்த ஹதீஸை அன்னார் எங்களுக்கு அறிவிப்பதற்கு) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களின் பரிந்துரையை கோரியிருந்தோம். அனஸ் (ரலி) அவர்கள் ‘ளுஹா’ தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அங்குப் போய் சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைய எங்களுக்காக ஸாபித் (ரஹ்) அவர்கள் அனுமதி கேட்டார்கள். பிறகு நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் ஸாபித் (ரஹ்) அவர்களைத் தம்முடன் அமர வைத்துக் கொண்டார்கள். ஸாபித் (ரஹ்) அவர்கள், “அபூஹம்ஸா! பஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸை அறிவிக்குமாறு கோருகிறார்கள்” என்று கேட்டுக் கொண்டபோது, அனஸ் (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள்.

நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்றுப்) புறப்பட்டோம். நாங்கள் பாலைவன (மணல்)மேட்டுக்கு வந்தபோது, “நாம் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அவர்களைச் சந்தித்து சலாம் சொல்லிக் கொள்ளலாம்” என்று பேசிக்கொண்டோம். அன்னார், (ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிற்கு அஞ்சி) அபூகலீஃபா என்பவரது இல்லத்தில் ஒளிந்திருந்த அவர்களிடம் சென்று சலாம் கூறினோம். மேலும், “அபூசயீத் (ஹஸன் அல்-பஸரீ) அவர்களே! நாங்கள் உங்கள் சகோதரர் அபூஹம்ஸா (அனஸ்-ரலி) அவர்களிடமிருந்து வருகிறோம். பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பாக அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸைப் போன்று வேறு யாரும் அறிவிக்க நாங்கள் கேட்டதில்லை” என்று கூறினோம்.

அதற்கு ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அவர்கள், “(அதைச்) சொல்லுங்கள்!” என்றார்கள். அந்த ஹதீஸை நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்!” என்றார்கள். அதற்கு நாங்கள், “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறவில்லை” என்றோம். அதற்கு ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவாற்றலும் உடல்பலமும் மிக்கவராக இருந்தபோது இந்த ஹதீஸை (இன்னும் விரிவாக) எமக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அதில் சிலவற்றை இப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறாமல் விட்டுள்ளார்கள். முதியவரான அன்னார் அதை மறந்து விட்டார்களா? அன்றியும் (நபிகளாரின் பரிந்துரை கிடைத்துவிடும் என்று) நம்பி (நல்லறங்களில் நாட்டமில்லாமல்) இருந்து விடுவீர்கள் என்று (மீதியைச் சொல்ல) வெறுத்தார்களா? என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

நாங்கள் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், “(மீதியைச்) எங்களுக்குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நபிமொழியை (முழுதுமாக) உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” (என்று சொல்லிவிட்டு),

“பிறகு நான்காம் முறையும் நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்து விடுவேன். ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளூங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். நான், ‘என் இறைவா! லா இலாஹ இல்லல்லாஹ் மொழிந்தவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக!’ என்று கேட்பேன். அதற்கு இறைவன், ‘அந்த உரிமை உங்களுக்கில்லை/அந்தப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை’ என்று கூறிவிட்டு, ‘மாறாக என் வல்லமையின் மீதும் பெருமையின் மீதும் மகத்துவத்தின் மீதும் ஆணையாக! லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவரை நிச்சயமாக நானே (நரகத்திலிருந்து) வெளியேற்றுவேன்’ என்று அல்லாஹ் கூறுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்

என்ற கூடுதல் செய்தியை ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் மஅபதிப்னு ஹிலால் அல்அனஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்: ஹசன் அல்-பஸரீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மேலும், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அனஸ் (ரலி) அவர்கள் நினைவாற்றலும் உடல் பலமும் மிக்கவராக இருந்(தபோது இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்)தார்கள்” என்றும் ஹசன் அல்-பஸரீ (ரஹ்) கூறினார்கள்.

Share this Hadith:

Leave a Comment