அத்தியாயம்: 1, பாடம்: 87, ஹதீஸ் எண்: 301

حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بَكْرَ بْنَ سَوَادَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَلَا قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي ‏ ‏إِبْرَاهِيمَ “‏رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنْ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي‏

” ‏الْآيَةَ وَقَالَ ‏ ‏عِيسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ “‏إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ” ‏فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي وَبَكَى فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏اذْهَبْ إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَرَبُّكَ أَعْلَمُ فَسَلْهُ مَا يُبْكِيكَ فَأَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَا قَالَ وَهُوَ أَعْلَمُ فَقَالَ اللَّهُ ‏ ‏يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏اذْهَبْ إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏فَقُلْ إِنَّا ‏ ‏سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلَا نَسُوءُكَ ‏

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறுவதாக அல்லாஹ் (குர் ஆனில்) எடுத்துச் சொல்லுகின்ற, “இறைவா! நிச்சயமாக (சிலைகளான) இவை மக்களில் அநேகரை வழிகெடுத்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவராவார் …” என்ற (14:36ஆவது) வசனத்தையும் ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும் உன் அடியார்களே!) நீயே கண்ணியமிக்கவன்; ஞானம் நிறைந்தவன்” என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)” என்று அழுது பிரார்த்தித்தார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று -உங்கள் இறைவனுக்குத் தெரியும்; என்றாலும்- ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேளுங்கள்” என்றான்.

அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, (நபிகளாரிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறிய (பிரார்த்தனைக்) கூற்றைத் தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், “ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தவர் தொடர்பாக உம்மை மனநிறைவடையச் செய்வோம்; உம்மை நாம் துயரில் ஆழ்த்த மாட்டோம் என்று கூறுக” என்றான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment