அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 307

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏وَرَهْطَكَ مِنْهُمْ الْمُخْلَصِينَ خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى صَعِدَ ‏ ‏الصَّفَا ‏ ‏فَهَتَفَ ‏ ‏يَا ‏ ‏صَبَاحَاهْ ‏ ‏فَقَالُوا مَنْ هَذَا الَّذِي يَهْتِفُ قَالُوا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏فَاجْتَمَعُوا إِلَيْهِ فَقَالَ يَا بَنِي فُلَانٍ يَا بَنِي فُلَانٍ يَا بَنِي فُلَانٍ يَا ‏ ‏بَنِي عَبْدِ مَنَافٍ ‏ ‏يَا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَاجْتَمَعُوا إِلَيْهِ فَقَالَ ‏ ‏أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا تَخْرُجُ ‏ ‏بِسَفْحِ ‏ ‏هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ قَالُوا مَا جَرَّبْنَا عَلَيْكَ كَذِبًا قَالَ فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ قَالَ فَقَالَ ‏ ‏أَبُو لَهَبٍ ‏ ‏تَبًّا لَكَ أَمَا جَمَعْتَنَا إِلَّا لِهَذَا ثُمَّ قَامَ فَنَزَلَتْ هَذِهِ السُّورَةُ ‏ ‏تَبَّتْ يَدَا ‏ ‏أَبِي لَهَبٍ ‏ ‏وَقَدْ ‏ ‏تَبَّ ‏

‏كَذَا قَرَأَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏إِلَى آخِرِ السُّورَةِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ صَعِدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ ‏ ‏الصَّفَا ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏صَبَاحَاهْ ‏ ‏بِنَحْوِ حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ نُزُولَ الْآيَةِ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீதேறி, “யா ஸபாஹா! (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!)” என்று உரத்த குரலில் விளித்தார்கள். அப்போது (குறைஷி) மக்கள், “உரத்து விளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு “முஹம்மத்” என்று (சிலர்) பதிலளித்தனர். மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கித் திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!” என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். தொடர்ந்து, “இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் செவியுற்ற அனுபவம் (இதுவரை) எங்களுக்கில்லை. (எனவே, நம்புவோம்)” என்று சொன்னார்கள்.

“அப்படியென்றால், (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது, “உனக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா?” என்று (அவர்களைப் பார்த்துக் குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப் கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறப்பட) எழுந்தார்கள். “அழிந்துபடட்டும் அபூலஹபின் இரு கரங்களும்! அவனும் அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அப்போது அருளப்பட்டது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

இந்த (111) அத்தியாயத்தின் முதலாவது வசனத்தின் இறுதியை (‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) வ “கத்” தப் (அவன் அழிந்தே விட்டான்) என்று (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

அபூ முஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘யா ஸபாஹா (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!)’ என்று விளித்தார்கள்” என்று ஆரம்பிக்கிறது. ஆனால், “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பட்ட தகவல் அதில் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 306

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏التَّيْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ ‏ ‏وَزُهَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَا ‏

‏لَمَّا نَزَلَتْ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏قَالَ انْطَلَقَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏رَضْمَةٍ ‏ ‏مِنْ جَبَلٍ فَعَلَا أَعْلَاهَا حَجَرًا ثُمَّ نَادَى ‏ ‏يَا ‏ ‏بَنِي عَبْدِ مَنَافَاهْ ‏ ‏إِنِّي نَذِيرٌ إِنَّمَا مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ رَأَى الْعَدُوَّ فَانْطَلَقَ ‏ ‏يَرْبَأُ ‏ ‏أَهْلَهُ فَخَشِيَ أَنْ يَسْبِقُوهُ فَجَعَلَ يَهْتِفُ ‏ ‏يَا ‏ ‏صَبَاحَاهْ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏زُهَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏وَقَبِيصَةَ بْنِ مُخَارِقٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றுக்குச் சென்று, அதன் உச்சியிலிருந்த கல்மீது ஏறிநின்ற பின்னர், “அப்து மனாஃபின் மக்களே!” என்று கூவியழைத்தார்கள். தொடர்ந்து, “நான் (உங்களை) எச்சரிப்பவன் ஆவேன். எதிரிகள் வரக் கண்டு, தன் குடும்பத்தாரைக் காப்பாற்றச் சென்றபோது, எதிரிகள் முந்திக் கொண்டு விடுவார்களோ என்றஞ்சி, ‘யா ஸபாஹா! (உதவி, உதவி! அதிகாலை ஆபத்து!)’ என்று கூவியழைத்த ஒருவனின் உவமையாக (இப்போது) நானும் (அழைக்கப் பட்டவர்களாக) நீங்களும் இருக்கிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கபீஸா பின் அல்-முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ரு (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 305

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ أُنْزِلَ عَلَيْهِ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏يَا مَعْشَرَ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنْ اللَّهِ لَا ‏ ‏أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏لَا ‏ ‏أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا ‏ ‏عَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏لَا ‏ ‏أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا يَا ‏ ‏صَفِيَّةُ ‏ ‏عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا ‏ ‏أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا يَا ‏ ‏فَاطِمَةُ ‏ ‏بِنْتَ رَسُولِ اللَّهِ سَلِينِي بِمَا شِئْتِ لَا ‏ ‏أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا ‏

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ ذَكْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ هَذَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:114)ஆவது இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குறைஷிக் கூட்டத்தாரே! (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) உங்களை நீங்களே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருவேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 304

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَيُونُسُ بْنُ بُكَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏لَمَّا نَزَلَتْ ‏”‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏الصَّفَا ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ ‏ ‏يَا ‏ ‏صَفِيَّةُ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏يَا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا سَلُونِي مِنْ مَالِي مَا شِئْتُمْ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீதேறி, “முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்வி(ன் விசாரணை/தண்டனையி)லிருந்து உங்களைக் காக்க என்னால் இயலாது.(வேணுமானால்) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 89, ஹதீஸ் எண்: 303

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ‏ “‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ‏
” ‏دَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُرَيْشًا ‏ ‏فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ فَقَالَ ‏ ‏يَا ‏ ‏بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي مُرَّةَ بنِ كَعْبٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ شَمْسٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ مَنَافٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي هَاشِمٍ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنْ النَّارِ يَا ‏ ‏فَاطِمَةُ ‏ ‏أَنْقِذِي نَفْسَكِ مِنْ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا ‏ ‏سَأَبُلُّهَا ‏ ‏بِبَلَالِهَا ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏جَرِيرٍ ‏ ‏أَتَمُّ وَأَشْبَعُ ‏

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்றுகூடிய பின்னர், “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்ஸின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்!

ஏனென்றால், அல்லாஹ்வி(ன் விசாரணை/தண்டனையி)லிருந்து உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இருக்கும் இரத்த உறவை நான் (கருகிவிடாமல்) பசுமையாக்குவேன்” என்று குலப் பெயராலும் தனியாகவும் அழைத்துக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).