அத்தியாயம்: 1, பாடம்: 92, ஹதீஸ் எண்: 315

حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏ابْنُ جُدْعَانَ ‏ ‏كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ وَيُطْعِمُ الْمِسْكِينَ فَهَلْ ذَاكَ نَافِعُهُ قَالَ ‏ ‏لَا يَنْفَعُهُ إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ ‏

“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இப்னு ஜுத்ஆன் இருந்தார். (மறுமையில்) அவை அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒருநாள்கூட ‘இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!’ என்று பிரார்த்தித்ததில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

Share this Hadith:

Leave a Comment