அத்தியாயம்: 1, பாடம்: 96, ஹதீஸ் எண்: 327

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏يَا ‏ ‏آدَمُ ‏ ‏فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ ‏ ‏بَعْثَ ‏ ‏النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ قَالَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ ‏

‏وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ‏

‏قَالَ فَاشْتَدَّ عَلَيْهِمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ فَقَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ ‏ ‏يَأْجُوجَ ‏ ‏وَمَأْجُوجَ ‏ ‏أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ قَالَ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ‏ ‏شَطْرَ ‏ ‏أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ ‏

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُمَا ‏ ‏قَالَا ‏ ‏مَا أَنْتُمْ يَوْمَئِذٍ فِي النَّاسِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي الثَّوْرِ الْأَبْيَضِ وَلَمْ يَذْكُرَا أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (மறுமை நாளில்), ‘ஆதமே!’ என்றழைப்பான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(இறைவா, கட்டளையிடு!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்’ என்று கூறுவார்கள். அப்போது இறைவன், ‘நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்தெடுங்கள்’ என்று கட்டளையிடுவான். அதற்கு அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது பேரை’ என்று பதிலளிப்பான். சிறுவனும் நரைத்து (கிழவனாகி) விடுகின்ற(தைப் போன்ற) நேரமது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, “கருவுற்ற ஒவ்வொரு பெண்ணும் தன் கருவை (அரைகுறையாகப்) பிரசவித்து விடும் நேரமது. மக்கள் (மதுவால்) போதை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் (அங்குக்) காண்பீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்” என்று (22:2 இறைவசனத்தையும்) சொன்னார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, மக்களுக்குக் கடுமையானதாகத் தோன்றியது. எனவே மக்கள், “(எஞ்சுகின்ற) அந்த ஒருவர் எங்களுள் யார்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி பெறுங்கள்! யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (தனியாகப் பிரிக்கப்படுவோரில்) இருப்பார்” என்று கூறிவிட்டுப் பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மகிழ்ச்சியடைந்து) அல்லாஹ்வைப் புகழ்ந்தோம்; “அல்லாஹ் மிகப் பெரியவன்” (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, கறுப்புக்காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றது – அல்லது – கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று (தனித்துவமாய் இருக்கும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்
-குத்ரீ (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸ், அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினம் மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்ற உவமையுடன் இடம்பெற்றுள்ளது. “கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று” என்ற உவமை இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment