அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1573

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏قَالَ قِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏إِنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏مِنْ الْأَجْرِ ‏

‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَكْثَرَ عَلَيْنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَبَعَثَ إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَسَأَلَهَا ‏ ‏فَصَدَّقَتْ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

“ஜனாஸாவைப் பின்தொடர்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறிவருகின்றாரே!” என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு “அபூஹுரைரா நம்மிடம் அதிகம் சொல்கின்றார்” என்று இப்னு உமர் (ரலி) கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி), “(அப்படியாயின்) நாம் ஏராளமான ‘கீராத்’களைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment