அத்தியாயம்: 11, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1576

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَلَّامُ بْنُ أَبِي مُطِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏رَضِيعِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنْ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ ‏
‏قَالَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ ‏ ‏فَقَالَ حَدَّثَنِي بِهِ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (ஜனாஸாத்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு : “இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) கூறியதாக எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்கள்’ என்றார்கள்” என்பதாக (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) கூறியுள்ளார்.