அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1617

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏لَمَّا تُوُفِّيَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَتْ ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا ‏

‏فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ابْنَيْ ‏ ‏بَيْضَاءَ ‏ ‏فِي الْمَسْجِدِ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏وَأَخِيهِ ‏

‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏سُهَيْلُ بْنُ دَعْدٍ ‏ ‏وَهُوَ ابْنُ ‏ ‏الْبَيْضَاءِ ‏ ‏أُمُّهُ ‏ ‏بَيْضَاءُ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்தபோது “அவரது மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்” என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பைளா (எனும் பெண்மணி) உடைய இரு புதல்வர்களான ஸுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்”’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்).

குறிப்பு: ஸுஹைல் (ரலி) உடைய தாயின் இயற் பெயர் ’தஅத்‘ என்பதாகும். ’தஅத்’தின் பிரபலமான (காரணப்) பெயர் ’பைளா’ என்பதாகும். எனவே, தாயின் பெயரோடு அறியப்படும் “ஸுஹைல் பின் ’தஅத்‘ என்பவரும் ஸுஹைல் பின் பைளா என்பவரும் ஒருவரே“ என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1616

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا لَمَّا تُوُفِّيَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَمُرُّوا بِجَنَازَتِهِ فِي الْمَسْجِدِ فَيُصَلِّينَ عَلَيْهِ فَفَعَلُوا فَوُقِفَ بِهِ عَلَى حُجَرِهِنَّ يُصَلِّينَ عَلَيْهِ أُخْرِجَ بِهِ مِنْ بَابِ الْجَنَائِزِ الَّذِي كَانَ إِلَى الْمَقَاعِدِ فَبَلَغَهُنَّ أَنَّ النَّاسَ عَابُوا ذَلِكَ وَقَالُوا مَا كَانَتْ الْجَنَائِزُ يُدْخَلُ بِهَا الْمَسْجِدَ فَبَلَغَ ذَلِكَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏

‏مَا أَسْرَعَ النَّاسَ إِلَى أَنْ يَعِيبُوا مَا لَا عِلْمَ لَهُمْ بِهِ عَابُوا عَلَيْنَا أَنْ يُمَرَّ بِجَنَازَةٍ فِي الْمَسْجِدِ وَمَا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏سُهَيْلِ بْنِ بَيْضَاءَ ‏ ‏إِلَّا فِي جَوْفِ الْمَسْجِدِ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்தபோது அவரது மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப்போவதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது மையித் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து, அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு, ‘மகாஇத்’ எனும் இடம் நோக்கி இருந்த ‘பாபுல் ஜனாயிஸ்’ தலைவாயில் வழியாக வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் “மையித்கள் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது” என்று அவர்கள் பேசிக்கொள்வதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான், “மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு மையித்தைக் கொண்டுசென்றதற்காக எங்களை அவர்கள் குறை சொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப் பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1615

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِإِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏

‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَمَرَتْ أَنْ يَمُرَّ بِجَنَازَةِ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏فِي الْمَسْجِدِ فَتُصَلِّيَ عَلَيْهِ فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ ‏ ‏مَا أَسْرَعَ مَا نَسِيَ النَّاسُ مَا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏سُهَيْلِ بْنِ الْبَيْضَاءِ ‏ ‏إِلَّا فِي الْمَسْجِدِ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு ஆயிஷா (ரலி) கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “மக்கள் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்).