அத்தியாயம்: 11, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1617

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏لَمَّا تُوُفِّيَ ‏ ‏سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَتْ ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا ‏

‏فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ابْنَيْ ‏ ‏بَيْضَاءَ ‏ ‏فِي الْمَسْجِدِ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏وَأَخِيهِ ‏

‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏سُهَيْلُ بْنُ دَعْدٍ ‏ ‏وَهُوَ ابْنُ ‏ ‏الْبَيْضَاءِ ‏ ‏أُمُّهُ ‏ ‏بَيْضَاءُ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) இறந்தபோது “அவரது மையித்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்” என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பைளா (எனும் பெண்மணி) உடைய இரு புதல்வர்களான ஸுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்”’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்).

குறிப்பு: ஸுஹைல் (ரலி) உடைய தாயின் இயற் பெயர் ’தஅத்‘ என்பதாகும். ’தஅத்’தின் பிரபலமான (காரணப்) பெயர் ’பைளா’ என்பதாகும். எனவே, தாயின் பெயரோடு அறியப்படும் “ஸுஹைல் பின் ’தஅத்‘ என்பவரும் ஸுஹைல் பின் பைளா என்பவரும் ஒருவரே“ என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment