அத்தியாயம்: 12, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1739

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَوْ أَنَّ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏مِلْءَ وَادٍ مَالًا لَأَحَبَّ أَنْ يَكُونَ إِلَيْهِ مِثْلُهُ وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَلَا أَدْرِي أَمِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏فَلَا أَدْرِي أَمِنْ الْقُرْآنِ لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنَ عَبَّاسٍ

“ஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதைப் போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே விரும்புவான். மனிதனுடைய ஆத்மாவின் பேராசையை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோருபவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : “இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது” என்று இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது’ என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.

Share this Hadith:

Leave a Comment