அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1642

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏كُنَّا ‏ ‏نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِينَا عَنْ كُلِّ صَغِيرٍ وَكَبِيرٍ حُرٍّ وَمَمْلُوكٍ مِنْ ثَلَاثَةِ أَصْنَافٍ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ صَاعًا مِنْ ‏ ‏أَقِطٍ ‏ ‏صَاعًا مِنْ شَعِيرٍ ‏

‏فَلَمْ نَزَلْ نُخْرِجُهُ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَرَأَى أَنَّ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏مِنْ ‏ ‏بُرٍّ ‏ ‏تَعْدِلُ صَاعًا مِنْ تَمْرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَأَمَّا أَنَا فَلَا أَزَالُ أُخْرِجُهُ كَذَلِكَ

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்ந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ‘ஸாஉ’, பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, பார்லியிலிருந்து ஒரு ‘ஸாஉ’ ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) (எங்களிடம்) வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) கோதுமையிலிருந்து இரு ‘முத்’, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதி(எங்களிடம் கூறி)னார்கள்.

நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment