அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1756

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ ‏ ‏يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الْآخَرِ الْحَرْفَ بَعْدَ الْحَرْفِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏أَقْبَلَتْ ‏ ‏هَوَازِنُ ‏ ‏وَغَطَفَانُ ‏ ‏وَغَيْرُهُمْ بِذَرَارِيِّهِمْ وَنَعَمِهِمْ وَمَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَئِذٍ عَشَرَةُ آلَافٍ وَمَعَهُ ‏ ‏الطُّلَقَاءُ ‏ ‏فَأَدْبَرُوا عَنْهُ حَتَّى بَقِيَ وَحْدَهُ قَالَ فَنَادَى يَوْمَئِذٍ نِدَاءَيْنِ لَمْ يَخْلِطْ بَيْنَهُمَا شَيْئًا قَالَ فَالْتَفَتَ عَنْ يَمِينِهِ فَقَالَ ‏ ‏يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ نَحْنُ مَعَكَ قَالَ ثُمَّ الْتَفَتَ عَنْ يَسَارِهِ فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ أَبْشِرْ نَحْنُ مَعَكَ قَالَ وَهُوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ فَنَزَلَ فَقَالَ أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَانْهَزَمَ الْمُشْرِكُونَ وَأَصَابَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَنَائِمَ كَثِيرَةً فَقَسَمَ فِي ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالطُّلَقَاءِ ‏ ‏وَلَمْ يُعْطِ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏شَيْئًا فَقَالَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏إِذَا كَانَتْ الشِّدَّةُ فَنَحْنُ ‏ ‏نُدْعَى ‏ ‏وَتُعْطَى الْغَنَائِمُ غَيْرَنَا فَبَلَغَهُ ذَلِكَ فَجَمَعَهُمْ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ فَسَكَتُوا فَقَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا وَتَذْهَبُونَ ‏ ‏بِمُحَمَّدٍ ‏ ‏تَحُوزُونَهُ ‏ ‏إِلَى بُيُوتِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ رَضِينَا قَالَ فَقَالَ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعْبًا ‏ ‏لَأَخَذْتُ ‏ ‏شِعْبَ ‏ ‏الْأَنْصَارِ ‏

‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَقُلْتُ ‏ ‏يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏أَنْتَ شَاهِدٌ ذَاكَ قَالَ وَأَيْنَ أَغِيبُ عَنْهُ

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَحَامِدُ بْنُ عُمَرَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏السُّمَيْطُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏افْتَتَحْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏ثُمَّ إِنَّا غَزَوْنَا ‏ ‏حُنَيْنًا ‏ ‏فَجَاءَ الْمُشْرِكُونَ بِأَحْسَنِ صُفُوفٍ رَأَيْتُ قَالَ فَصُفَّتْ الْخَيْلُ ثُمَّ صُفَّتْ الْمُقَاتِلَةُ ثُمَّ صُفَّتْ النِّسَاءُ مِنْ وَرَاءِ ذَلِكَ ثُمَّ صُفَّتْ الْغَنَمُ ثُمَّ صُفَّتْ النَّعَمُ قَالَ وَنَحْنُ بَشَرٌ كَثِيرٌ قَدْ بَلَغْنَا سِتَّةَ آلَافٍ وَعَلَى ‏ ‏مُجَنِّبَةِ ‏ ‏خَيْلِنَا ‏ ‏خَالِدُ بْنُ الْوَلِيدِ ‏ ‏قَالَ فَجَعَلَتْ خَيْلُنَا ‏ ‏تَلْوِي خَلْفَ ظُهُورِنَا فَلَمْ نَلْبَثْ أَنْ انْكَشَفَتْ خَيْلُنَا وَفَرَّتْ ‏ ‏الْأَعْرَابُ ‏ ‏وَمَنْ نَعْلَمُ مِنْ النَّاسِ قَالَ فَنَادَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَالَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏يَالَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏يَالَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏يَالَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏هَذَا حَدِيثُ ‏ ‏عِمِّيَّةٍ ‏ ‏قَالَ قُلْنَا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَايْمُ اللَّهِ مَا أَتَيْنَاهُمْ حَتَّى هَزَمَهُمْ اللَّهُ قَالَ فَقَبَضْنَا ذَلِكَ الْمَالَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى ‏ ‏الطَّائِفِ ‏ ‏فَحَاصَرْنَاهُمْ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ رَجَعْنَا إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَنَزَلْنَا قَالَ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْطِي الرَّجُلَ الْمِائَةَ مِنْ الْإِبِلِ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَأَبِي التَّيَّاحِ ‏ ‏وَهِشَامِ بْنِ زَيْدٍ

ஹுனைன் போரின்போது (எதிரிகளான) ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை எதிர்நோக்கி) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். எனினும், அவர்கள் (எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கினர். அப்போது நபி (ஸல்) எதுவும் பேசாமல் இரு முறை அழைப்பு விடுத்தார்கள். தமது வலப் பக்கம் திரும்பி “அன்ஸாரிகளே!” என்று அழைக்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று கூறினர். பிறகு தம் இடப் பக்கம் திரும்பி, “அன்ஸாரிகளே!” என்று அழைத்தார்கள். அவர்களும், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதனுமாவேன்” என்று சொன்னார்கள். பிறகு (தொடர்ந்து நடந்த அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் வெற்றிகொள்ளப்பட்டனர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிகமான போர்ச் செல்வங்களைப் பெற்றார்கள். அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.

ஆகவே, அன்ஸாரிகள் (சிலர்), “கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகின்றோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்), அன்ஸாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்ஸாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தியின் நிலை என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்), “அன்ஸாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (உங்களைத்தான்) விரும்புகின்றோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்), “மக்கள் அனைவரும் ஒரு பள்ளத்தாக்கின் வழியில் செல்ல, அன்ஸாரிகள் மட்டும் ஒரு கணவாய் வழிச் செல்வார்களாயின், நான் அன்ஸாரிகள் செல்லும் கணவாய் வழியையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்புகள் : இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்), (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) நீங்கள் அங்கு இருந்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி), “நான் நபி (ஸல்) அவர்களை விடுத்து எங்குப் போவேன்?” என்று பதிலளித்தார்கள்.

அல் முஅத்தமிர் பின் ஸுலைமான் வழி அறிவிப்பில்,
நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட் படையினரும் அதற்குப் பின்னால் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் குதிரைப் படைக்கு காலித் பின் வலீத் (ரலி) (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப் படை (திடீரென) எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை (களத்திலிருந்து) விலகிச் செல்லத் தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஹாஜிர்களே, முஹாஜிர்களே!” என்று அழைத்தார்கள். பின்னர் “அன்ஸாரிகளே, அன்ஸாரிகளே!” என்று அழைத்தார்கள்.

(“இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்” என்று அறிவிப்பாளர் குறிப்பிடுகின்றார்)

அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தோம்” என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச் செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கிச் சென்று அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்குத்) தங்கினோம். அப்போது ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வழங்கினார்கள்” எனும் விபரம் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment