அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1760

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏قَسَمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَسْمًا فَقَالَ رَجُلٌ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَارَرْتُهُ فَغَضِبَ مِنْ ذَلِكَ غَضَبًا شَدِيدًا وَاحْمَرَّ وَجْهُهُ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَذْكُرْهُ لَهُ قَالَ ثُمَّ قَالَ ‏ ‏قَدْ أَوُذِيَ ‏ ‏مُوسَى ‏ ‏بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், “இது இறைவனின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர் கூறியதை இரகசியமாகச் சொன்னேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடுமையாகக் கோபப்பட்டார்கள்; அவர்களின் முகம் சிவந்துவிட்டது. அந்தத் தகவலை அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று நான் எண்ணினேன். பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூஸா (அலை) இதைவிட அதிகமாக மன வேதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆயினும், அவர்கள் சகித்துக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment