அத்தியாயம்: 13, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1866

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏حَدَّثَهُ ‏

‏أَنَّ ‏ ‏مَرْوَانَ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏يَسْأَلُ عَنْ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا أَيَصُومُ فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ لَا مِنْ حُلُمٍ ثُمَّ لَا يُفْطِرُ وَلَا يَقْضِي

மர்வான் பின் அல்ஹகம், ‘பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவர் நோன்பு நோற்கலாமா?’ என்பது குறித்துக் கேட்பதற்காக என்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார். (அது பற்றி நான் கேட்டேன்) “நபி (ஸல்) (இரவில்) உறக்க ஸ்கலிதத்தால் அல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பை(த் தொடர்வார்களே தவிர) விட்டுவிடமாட்டார்கள்; (பின்னாளில் களா வாகத்) திரும்ப நோற்கவுமாட்டார்கள்” என உம்மு ஸலமா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment