அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1910

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏
‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَوَجَدَ ‏ ‏الْيَهُودَ ‏ ‏يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ فَسُئِلُوا عَنْ ذَلِكَ فَقَالُوا هَذَا الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ ‏ ‏مُوسَى ‏ ‏وَبَنِي إِسْرَائِيلَ ‏ ‏عَلَى ‏ ‏فِرْعَوْنَ ‏ ‏فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ أَوْلَى ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْكُمْ فَأَمَرَ بِصَوْمِهِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَسَأَلَهُمْ عَنْ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு (நாடு துறந்து) வந்தபோது, யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, “இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூஸா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே, இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்” என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்), “உங்களைவிட மூஸாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே” என்று கூறிவிட்டு, ஆஷூரா நோன்பு நோற்குமாறு (முஸ்லிம்களுக்குக்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “…எனவே யூதர்களிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment