அத்தியாயம்: 13, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1927

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَابِقٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَهُ ‏ ‏وَأَوْسَ بْنَ الْحَدَثَانِ ‏ ‏أَيَّامَ التَّشْرِيقِ ‏ ‏فَنَادَى أَنَّهُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ وَأَيَّامُ ‏ ‏مِنًى ‏ ‏أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَنَادَيَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னையும் அவ்ஸு பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி, “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; மினா’வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் மாலிக் (ரலி)

குறிப்பு : அப்துல் மாலிக் பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1926

و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْشَةَ الْهُذَلِيِّ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيَّامُ التَّشْرِيقِ ‏ ‏أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْشَةَ ‏ ‏قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَبَا الْمَلِيحِ ‏ ‏فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ فَذَكَرَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَزَادَ فِيهِ وَذِكْرٍ لِلَّهِ

“அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுபைஷா பின் அம்ரிப்னு அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி)

குறிப்பு : அபூகிலாபா வழி அறிவிப்பில், “எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்ததோடு, கூடுதலாக, ‘இறைவனை நினைவுகூர்(ந்து திக்ரு செய்)வதற்கும் உரிய நாளாகும்’ என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்” என்று காலித் அல்ஹத்தா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அய்யாமுத் தஷ்ரீக் என்பன ஹஜ் மாதத்தின் 11,12,13 ஆகிய மூன்று நாட்களாகும்.