அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 2000

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَةَ بْنَ أَبِي لُبَابَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏زِرِّ بْنِ حُبَيْشٍ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏فِي لَيْلَةِ الْقَدْرِ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهَا قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَأَكْبَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ‏

‏وَإِنَّمَا شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْحَرْفِ هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَحَدَّثَنِي بِهَا صَاحِبٌ لِي عَنْهُ

உபை பின் கஅப் (ரலி), லைலத்துல் கத்ரு இரவு குறித்துக் கூறுகையில், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

குறிப்புகள் : “எனது அறிவுக்கு எட்டியவரையில், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த ஓர் இரவுதான் இருபத்தேழாவது இரவாகும்’ (என்று உபை (ரலி) தெரிவித்தார்கள்) என்று நான் கருதுகின்றேன்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த ஓர் இரவு…‘ எனும் வாசகத்தில் ஷுஅபா (ரஹ்) ஐயம் தெரிவித்தார்.

‘அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவர் இதை எனக்கு அறிவித்தார்’ என ஷுஅபா (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

Share this Hadith:

Leave a Comment