அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2109

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ حَتَّى قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ ‏ ‏وَلَمْ يُهْدِ ‏ ‏فَلْيَحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ ‏ ‏وَأَهْدَى ‏ ‏فَلَا يَحِلُّ حَتَّى يَنْحَرَ هَدْيَهُ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏أَنْقُضَ رَأْسِي ‏ ‏وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ قَالَتْ فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى إِذَا قَضَيْتُ حَجَّتِي بَعَثَ مَعِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏مَكَانَ عُمْرَتِي الَّتِي أَدْرَكَنِي الْحَجُّ وَلَمْ أَحْلِلْ مِنْهَا

நாங்கள், ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ரா(வைத் தனியாக)ச் செய்வதற்கு முஹ்ரிம் ஆனவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக (மட்டும்) முஹ்ரிம் ஆனவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்),

“பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராத, உம்ராவிற்கான (‘தமத்துஉ’) முஹ்ரிம், (உம்ராவை நிறைவேற்றி) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும்”,

“தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பதோடு, உம்ராவுடன் சேர்த்து ஹஜ்ஜுக்குமான (‘கிரான்’) முஹ்ரிமானவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராம் நிலையிலிருந்து விடுபடவேண்டாம்”, “ஹஜ்ஜுக்காக மட்டும் (‘இஃப்ராத்’) முஹ்ரிமானவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நான் உம்ராவிற்காக மட்டுமே முஹ்ரிம் ஆகியிருந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவை விடுத்து, ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களை என்னுடன் தன்யீமுக்கு அனுப்பி, நான் உம்ராவை நிறைவேற்ற முடியாமல் ஹஜ்ஜை அடைந்து கொண்டதால், (தவறிய) உம்ராவுக்கான தல்பியா கூறிய முஹ்ரிமாகி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment