அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2123

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّهَا أَهَلَّتْ بِعُمْرَةٍ فَقَدِمَتْ وَلَمْ تَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى حَاضَتْ ‏ ‏فَنَسَكَتْ ‏ ‏الْمَنَاسِكَ كُلَّهَا وَقَدْ أَهَلَّتْ بِالْحَجِّ فَقَالَ لَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏يَسَعُكِ طَوَافُكِ لِحَجِّكِ وَعُمْرَتِكِ ‏ ‏فَأَبَتْ ‏ ‏فَبَعَثَ بِهَا مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ

நான் உம்ராவிற்காக முஹ்ரிமாகி (மக்காவிற்கு) வந்தேன். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்பே எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, (தவாஃபைத் தவிர உம்ராவின்) அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றினேன்.

(அரஃபாவின் நாளில் தூய்மையானேன்) ஹஜ்ஜுக்காக (முஹ்ரிமாகி) ‘தல்பியா’ கூறி(ஹஜ்ஜை நிறைவேற்றி)னேன். (மினாவிலிருந்து) புறப்படும்) நஃப்ருடைய நாளில் நபி (ஸல்) என்னிடம், “நீ ஹஜ்ஜுக்கு (தவாஃப்) சுற்றியது உம்ராவிற்கும் போதுமானதாகும். (எனவே, நீ உம்ராச் செய்ய வேண்டிய தில்லை)” என்று சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. ஆகவே, என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீமு’க்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஹஜ்ஜுக்குப் பின்னர் உம்ராச் செய்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment