அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2140

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَنْ ‏ ‏دَانَ ‏ ‏دِينَهَا يَقِفُونَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانُوا يُسَمَّوْنَ ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَكَانَ سَائِرُ ‏ ‏الْعَرَبِ ‏ ‏يَقِفُونَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَأْتِيَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَيَقِفَ بِهَا ثُمَّ ‏ ‏يُفِيضَ ‏ ‏مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“

குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (அறியாமைக் கால ஹஜ்ஜின்போது, தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். அவர்கள் ‘(சமயப் பற்றில்) கடும்போக்குள்ள (ஹும்ஸு) குழுவினர்’ எனப் பெயர் பெற்றவர்கள். மற்ற எல்லா அரபியரும் அரஃபாப் பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) ‘அரஃபா’வுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான்:.“… பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment