அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2153

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏إِنِّي لَأُحَدِّثُكَ بِالْحَدِيثِ الْيَوْمَ يَنْفَعُكَ اللَّهُ بِهِ بَعْدَ الْيَوْمِ وَاعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏أَعْمَرَ ‏ ‏طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي الْعَشْرِ فَلَمْ تَنْزِلْ آيَةٌ ‏ ‏تَنْسَخُ ‏ ‏ذَلِكَ وَلَمْ يَنْهَ عَنْهُ حَتَّى ‏ ‏مَضَى لِوَجْهِهِ ‏ ‏ارْتَأَى كُلُّ امْرِئٍ بَعْدُ مَا شَاءَ أَنْ يَرْتَئِيَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ارْتَأَى رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ ‏ ‏يَعْنِي ‏ ‏عُمَرَ

என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), “நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிப்பேன்; அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் பூண அனுமதித்தார்கள். அந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப்பெறவில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்துவிட்டார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்)

குறிப்பு : முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பில் “…பின்னர் ஒருவர் – அதாவது உமர் (ரலி) – தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment