و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا خَرَجَ فِي الْفِتْنَةِ مُعْتَمِرًا وَقَالَ إِنْ صُدِدْتُ عَنْ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ فَأَهَلَّ بِعُمْرَةٍ وَسَارَ حَتَّى إِذَا ظَهَرَ عَلَى الْبَيْدَاءِ الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ فَخَرَجَ حَتَّى إِذَا جَاءَ الْبَيْتَ طَافَ بِهِ سَبْعًا وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا لَمْ يَزِدْ عَلَيْهِ وَرَأَى أَنَّهُ مُجْزِئٌ عَنْهُ وَأَهْدَى
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (மக்காவை ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் முற்றுகை இட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா உடன்படிக்கையின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காகத் தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள்.
‘பைதாஉ’ எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில்) ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.
பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழு முறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா-மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (ஸயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்க வில்லை. அதுவே (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள். மேலும், பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)