அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2186

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏قَالَ ‏
‏قِيلَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنَّ هَذَا الْأَمْرَ قَدْ ‏ ‏تَفَشَّغَ ‏ ‏بِالنَّاسِ مَنْ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَدْ حَلَّ الطَّوَافُ عُمْرَةٌ فَقَالَ ‏ ‏سُنَّةُ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ ‏ ‏رَغَمْتُمْ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்; இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்து மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அதுவேயாகும்; – உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்)

Share this Hadith: