அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2218

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الطُّفَيْلِ ‏ ‏قَالَ:

قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَلَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَهِيَ سُنَّةٌ قَالَ صَدَقُوا وَكَذَبُوا

நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தவாஃபின்போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் ஆமிர் (ரலி)

Share this Hadith: