அத்தியாயம்: 15, பாடம்: 42, ஹதீஸ் எண்: 2235

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ:‏

‏طَافَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏لِيَرَاهُ النَّاسُ ‏ ‏وَلِيُشْرِفَ ‏ ‏وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ ‏ ‏غَشُوهُ ‏

وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏وَلِيَسْأَلُوهُ ‏ ‏فَقَطْ

நபி (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவுக்கு இடையேயும் சுற்றிவந்தார்கள். மக்கள் தம்மைப் பார்த்து, தம்மிடம் (வழிப்பாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இபுனு கஷ்ரம் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் அவர்கள் (வழிபாட்டு விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காக” என்பது மட்டும் இடம்பெறவில்லை.

Share this Hadith: