அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2266

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ: ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ ‏

فَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِجَمْعٍ ‏ ‏كَذَلِكَ حَتَّى لَحِقَ بِاللَّهِ تَعَالَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள். அவற்றுக்கிடையே (கூடுதலான தொழுகைகள்) வேறெதுவும் தொழவில்லை.

(மஃக்ரிப்) மூன்று ரக்அத்கள் தொழுதுவிட்டு, (தொடர்ந்து) இஷாவை இரண்டு ரக்அத்தாக(சுருக்கி)த் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அல்லாஹ்விடம் சென்றடையும்வரை முஸ்தலிஃபாவில் இவ்வாறே தொழுதுவந்தார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்கள்.

Share this Hadith: