அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2267

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ: ‏

أَنَّهُ ‏ ‏صَلَّى الْمَغْرِبَ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏وَالْعِشَاءَ بِإِقَامَةٍ ثُمَّ حَدَّثَ عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ صَلَّى مِثْلَ ذَلِكَ وَحَدَّثَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَنَعَ مِثْلَ ذَلِكَ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏صَلَّاهُمَا بِإِقَامَةٍ وَاحِدَةٍ

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்), (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரு இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள். பிறகு, “இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்” என்றும், “அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” என்றும் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக ஸலமா பின் குஹைல் (ரஹ்)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: