அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2294

‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ الْحَجَّاجِ ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ قَالُوا وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَالْمُقَصِّرِينَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَلَمَّا كَانَتْ الرَّابِعَةُ قَالَ وَالْمُقَصِّرِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், (தலைமுடியை) மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” என்று பிரார்த்தித்ததும் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மறுபடியும்) “அல்லாஹ், மழித்துக் கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்வர்களுக்கும்…” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)” எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான்காவது தடவையில், குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக) ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: