அத்தியாயம்: 15, பாடம்: 55, ஹதீஸ் எண்: 2296

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏أَنَّهَا ‏

سَمِعَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا وَلِلْمُقَصِّرِينَ مَرَّةً ‏

وَلَمْ يَقُلْ ‏ ‏وَكِيعٌ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ

நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது தலைமுடியை மழித்துக்கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி)


குறிப்பு :

வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “விடைபெறும் ஹஜ்ஜின்போது… ” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith: