அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2305

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏قَالَ: ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَتَاهُ رَجُلٌ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَهُوَ وَاقِفٌ عِنْدَ ‏ ‏الْجَمْرَةِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ‏ ‏ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ‏ ‏أَفَضْتُ ‏ ‏إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا رَأَيْتُهُ سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ افْعَلُوا وَلَا ‏ ‏حَرَجَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நஹ்ரு’டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘ஜம்ரத்துல் அகபா’விற்கு அருகில் நின்றுகொண்டு இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். இன்னொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து)விட்டேன்” என்றார். அதற்கு, “குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்று விடையளித்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

Share this Hadith: