அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2312

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَابْنَ عُمَرَ ‏ ‏كَانُوا يَنْزِلُونَ ‏ ‏الْأَبْطَحَ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا لَمْ تَكُنْ تَفْعَلُ ذَلِكَ وَقَالَتْ إِنَّمَا ‏ ‏نَزَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَنَّهُ كَانَ مَنْزِلًا أَسْمَحَ لِخُرُوجِهِ

அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் (நஃப்ருடைய நாளில்) ‘அல்அப்தஹ்’ எனும் இடத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

ஆயிஷா (ரலி) அங்குத் தங்கமாட்டார்கள். மேலும் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்குத் தங்கியதற்குக் காரணம், அது (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியான இடமாக அமைந்திருந்ததுதான்” என்றும் கூறினார்கள் என்று உர்வா (ரஹ்) தம்மிடம் தெரிவித்ததாக இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸாலிம் (ரஹ்)

Share this Hadith: