و حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ ابْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَيُّوبَ عَنْ الْقَاسِمِ وَأَبِي قِلَابَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْعَثُ بِالْهَدْيِ أَفْتِلُ قَلَائِدَهَا بِيَدَيَّ ثُمَّ لَا يُمْسِكُ عَنْ شَيْءٍ لَا يُمْسِكُ عَنْهُ الْحَلَالُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வேறொருவர் மூலம் மக்காவுக்கு) அனுப்பிவைக்கும் பலிப் பிராணிகளுக்கு, நான் என் கைகளால் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய) பின்னர் (முஹ்ரிமல்லாதவருக்கு அனுமதிக்கப்பட்ட) எதையும் அல்லாஹ்வின் தூதர் தனக்குத் தடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)