அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2341

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ: ‏

‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَهِيَ مِنْ وَرَاءِ الْحِجَابِ تُصَفِّقُ وَتَقُولُ كُنْتُ ‏ ‏أَفْتِلُ ‏ ‏قَلَائِدَ ‏ ‏هَدْيِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدَيَّ ثُمَّ يَبْعَثُ بِهَا وَمَا يُمْسِكُ عَنْ شَيْءٍ مِمَّا يُمْسِكُ عَنْهُ الْمُحْرِمُ حَتَّى يُنْحَرَ ‏ ‏هَدْيُهُ ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِمِثْلِهِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஆயிஷா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து (ஆச்சரியப்பட்டு) கை தட்டுவதை நான் செவியுற்றேன். (காரணம் பலிப் பிராணியை ஹரமுக்கு அனுப்பிவைத்தவரின் நிலை பற்றி நான் வினவியிருந்தேன்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பலிப் பிராணிகளை (ஹஜ் காலத்தில் மக்காவிற்கு) அனுப்புவார்கள். முஹ்ரிமானவர் தமது பலிப் பிராணி பலியிடப்படும்வரை தடுத்துக்கொள்ளக்கூடிய எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமக்காகத்) தடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் (ரஹ்)

Share this Hadith: