அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2361

‏و حَدَّثَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏

أَنَّهُ ‏ ‏انْتَهَى إِلَى ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏وَقَدْ دَخَلَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏وَأَجَافَ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏عُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏الْبَابَ قَالَ فَمَكَثُوا فِيهِ ‏ ‏مَلِيًّا ‏ ‏ثُمَّ فُتِحَ الْبَابُ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَقِيتُ الدَّرَجَةَ فَدَخَلْتُ ‏ ‏الْبَيْتَ ‏ ‏فَقُلْتُ أَيْنَ صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا هَا هُنَا قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُمْ كَمْ صَلَّى

நான் (அன்று) கஅபாவிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அவர்கள் அனைவரும் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பட்டபோது நபி (ஸல்) வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்கு உள்ளே நுழைந்தேன். (வெளியே வந்துகொண்டிருந்தவர்களிடம்), “நபி (ஸல்) எந்த இடத்தில் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இங்கு தான்” என(ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் “நபி (ஸல்) எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: