அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2367

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْلَا حَدَاثَةُ عَهْدِ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏وَلَجَعَلْتُهَا عَلَى أَسَاسِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَإِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏حِينَ بَنَتْ ‏ ‏الْبَيْتَ ‏ ‏اسْتَقْصَرَتْ ‏ ‏وَلَجَعَلْتُ لَهَا ‏ ‏خَلْفًا ‏
و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய (குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த அண்மைக் காலத்தவராக இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு, இப்ராஹீம் (அலை) அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் இந்த ஆலயத்தை(ப்புதுப்பித்து)க் கட்டியபோது, அ(தன் அடித்தளத்)தைவிடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் நான் அமைத்திருப்பேன்” என்று என்னிடம் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: