அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2370

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ يَعْنِي ابْنَ مِينَاءَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ حَدَّثَتْنِي ‏ ‏خَالَتِي ‏ ‏يَعْنِي ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِشِرْكٍ لَهَدَمْتُ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏فَأَلْزَقْتُهَا بِالْأَرْضِ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا وَزِدْتُ فِيهَا سِتَّةَ أَذْرُعٍ مِنْ ‏ ‏الْحِجْرِ ‏ ‏فَإِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏اقْتَصَرَتْهَا حَيْثُ بَنَتْ ‏ ‏الْكَعْبَةَ

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையெனில், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். ‘ஹிஜ்ரு’ப் பகுதியின் (நில) அளவையில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: