அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2373

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَزَعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ ‏ ‏بَيْنَمَا هُوَ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏إِذْ قَالَ قَاتَلَ اللَّهُ ‏ ‏ابْنَ الزُّبَيْرِ ‏ ‏حَيْثُ يَكْذِبُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ يَقُولُ سَمِعْتُهَا تَقُولُ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ ‏ ‏الْبَيْتَ ‏ ‏حَتَّى أَزِيدَ فِيهِ مِنْ ‏ ‏الْحِجْرِ ‏ ‏فَإِنَّ قَوْمَكِ قَصَّرُوا فِي الْبِنَاءِ ‏
‏فَقَالَ ‏ ‏الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ ‏ ‏لَا تَقُلْ هَذَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَأَنَا ‏ ‏سَمِعْتُ ‏ ‏أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏تُحَدِّثُ هَذَا ‏ ‏قَالَ ‏ ‏لَوْ كُنْتُ سَمِعْتُهُ قَبْلَ أَنْ أَهْدِمَهُ لَتَرَكْتُهُ عَلَى مَا بَنَى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ

அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்தபோது, “அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி)) மீது பொய்யுரைக்கின்றார்.

ஆயிஷா (ரலி) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), ‘ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையென்றால், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு ஹிஜ்ருப் பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) தம்மிடம் கூறியதாக அவர் (பொய்யாகக்) கூறுகிறார்” என்றார்.

அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்), “இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை அப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்” என்றார்கள். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்” என்றார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூகஸஆ ஸுவைத் பின் ஹுஜைர் (ரஹ்)

Share this Hadith: